ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட 25 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகளுக்கும் இராஜாங்க அமைச்சர் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று தொடக்கம் ரயில் பயண சீட்டுக்களை  விநியோகிக்கும் பணி வழமை போன்று இடம்பெறவுள்ளது. ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க முடிந்தததாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  தெரிவித்தார்.

5 நாட்களாக இடம்பெற்ற ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் வேலைநிறுத்தத்தினால் ரெயில்வே திணைக்களத்திற்கு 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.