நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப் பாட்டுக்கு நுகர்வோரின் பாதுகாப்பும் ஒரு காரணம் என கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

“சமையல் எரிவாயுக்களின் தரம் தொடர்பில் பரிசோதிக் கும் அதிகாரம் இலங்கை கட்டளைகள் நிறு வனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமையல் எரிவாயு கொள்கலன்களில் தட்டுப்பாட்டுக்கு நுகர்வோரின் பாதுகாப்பும் ஒரு கார ணம். சமையில் எரிவாயுக்கள் கப்பலிலிருந்து இறக்கப் பட்டு, சந்தைகளுக்கு விநியோகிக்கும் வரையில் நுகர் வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் அது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் தற்போது சமையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது. நுகர்வோரின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதும் தட்டுப்பாட்டுக்குக் காரணம்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய அந்த நிறுவனங்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளா