அமைச்சர்கள் வாசுதேவநாணயக்கார விமல்வீரவன்ச உதயகம்மன்பில மூவரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்த பின்னர் யுகனதேவி மின் நிலையம் தொடர்பான அமைச்சரவையின் கூட்டு இணக்கப்பாட்டினை சவாலுக்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதி இதனை  தெரிவித்துள்ளார்.

மூன்று அமைச்சர்களும் பதவி நீக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு அதற்கான அவசியமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜெயசுந்தரவை சில அமைச்சர்கள் விமர்சித்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அது தவறான விடயம் என தெரிவித்துள்ளார்.