அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட உள்ளது.

இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள சங்கத்தின் மத்தியக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற் கொள்ளப்பட உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங் கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு, சுகாதார அமைச்சு கடிதம் மூலம் தீர்வு யோசனையை அனுப்பியுள்ளதாக அந்த சங் கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் ருவன் ஜயசூரிய தெரி வித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராய்ந்து, தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.