ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜேவிபியுடன் இணைந்து கூட்டணியொன்றை உருவாக்கலாம் என தயாசிறிஜயசேகர தெரிவித்துள்ளார்.

அனைத்து இடதுசாரிகட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும் என்பதே சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல்அற்ற ஜேவிபி போன்ற கட்சி சுத்தமான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்றதொரு கட்சியுடன் இணைந்து கூட்டணியை உருவாக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கூட்டணியே நாட்டின் நலனிற்கு உகந்தது என அவர் தெரிவித்துள்ளார்.