கொவிட் தொற்றுக்குள்ளாகியிருந்த வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே (83) காலமானார்.

அண்மையில் கொவிட் தொற்று உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே சிகிச்சை பலனின்றி காலமானார்.

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை கடந்த 3 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.