சவுத்லேண்டின் Winton என்ற இடத்தில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்திய 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இச்சம்பவத்தை அடுத்து பகல் 1 மணியளவில் பார்க் ஸ்ட்ரீட்டிற்கு பொலிஸார் அ
வரழைக்கப்பட்டனர்.

பின்னர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியும் மழலையர் பள்ளியும் பிற்பகல் சுமார் இரண்டு மணி நேரம் பூட்டப்பட்டிருந்தன, அதே நேரத்தில் அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டதுடன் காவல்துறை மற்றும் ஆயுதமேந்திய குற்றவாளிகள் படை சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்  துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயது இளைஞன் Invercargill என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என்றும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.