திருமண நிகழ்வுக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் கென்யா நாட்டில் இடம்பெற்றுள்ளது.

கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு கிழக்கே உள்ள என்ஜியு ஆற்றில் உள்ள பாலத்தின் மீது வேகமாக ஓடும் தண்ணீருக்கு மத்தியில் பஸ் கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இறந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் என்றும் விபத்தில் சிக்கியவர்களில் குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.