பாராளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபை அமர்வில் பங்கேற்கவில்லை.

எதிரணி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை, சபை அமர்வில் பங்கேற்கப்போவதில்லை என நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.