கிறிஸ்ட்சர்ச்சில் 18 வாலிபரை கொலை செய்ததாக 16 வயது இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்ட்ரல் சிட்டி சூப்பர் மார்க்கெட் கார் பார்க்கிங்கில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் 18 வயது இளைஞன் சுயநினைவின்றி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த இளைஞன் நேற்றைய தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 16 வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் Christchurch மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.