பாக்கிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கை பிரஜையின்  மனைவி தனது கணவரின் கொலைக்கு நீதி வழங்கப்படவேண்டும்  என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சியால்கோட்டில் கொல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் பிரியந்த குமாரவின் மனைவி தனது கணவரின் மரணம் குறித்து பாக்கிஸ்தான் இலங்கை அரசாங்கங்கள் நேர்மையான முறையில் விசாரiணையை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
செய்திகள் மூலமே அவர் கொடுரமான விதத்தில் கொல்லப்பட்டதை நாங்கள் அறிந்தோம் என பிரியந்த குமாரவின் மனைவி தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நான் இணையத்திலும் பார்த்தேன்  அவர் மிகவும் அமைதியான மனிதர் என பிரியந்த குமாரவின் மனைவி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதன் மூலம் எனது கணவருக்கும் எனது இரு பிள்ளைகளிற்கும் நீதியை வழங்குமாறு இரு நாடுகளினதும் தலைவர்களை கேட்டுக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.