பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜையை கொலை செய்தவர்களிற்கு அதிவேக சட்டநடவடிக்கை மூலம் உச்சபட்ச மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் இதனை  குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

சியால்கோட்டில் இலங்கை நிர்வாக அதிகாரி பிரியந்த குமாரவை அடித்து, எரித்து, கொலை செய்த அடிப்படைவாத கும்பலுக்கு, குறிப்பிட்ட காலவரைக்குள், அதிவேக சட்ட நடவடிக்கை மூலம், உச்சபட்ச மரண தண்டனை வழங்கப்படுவதை தவிர எதுவும் எங்களை ஆறுதல் படுத்தாது மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் @ImranKhanP என தெரிவித்துள்ளார்.