இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

சுமார் 11 கிராமங்களில் எரிமலை சாம்பல் படிந்துள்ளது.
உள்ளூர் ஊடகங்களின்படி, கிட்டத்தட்ட 1,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்தீவில் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.