மாலியில் பயங்கரவாதிகளால் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 33 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் மொப்தி மாகாணம் சொவிரி நகரில் இருந்து பென்டிய்ஹரா நகருக்கு நேற்று சென்று கொண்டிருந்தது பேருந்தில் 40 இற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் குறித்த பேருந்து சாங்கோ ஹெரி என்ற பகுதியில் சென்றபோது பேருந்தை இடைமறித்த பயங்கரவாதிகள் பேருந்து ஓட்டுநரை கொலை செய்தனர்.

இதனால், அதிர்சியடைந்த பயணிகள் தப்பியோட முயற்சித்த போது, பயங்கரவாதிகள் பேருந்து கதவுகளை மூடி அதற்கு தீ வைத்தனர். இந்த கோர தாக்குதலில் பயணிகள் 33 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு வருவதற்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.