கோல்டன் கேட் கல்யாணி என அழைக்கப்படும் புதிய களனிப் பாலத்தை இன்று பிற்பகல் 3.00 மணி முதல் பொதுமக்கள் பயன்படுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதன்முறையாக அதிநவீன தொழில் நுட்பத்துடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனிப் பாலம் நேற்று பொதுமக்கள் பாவனைக்காகக் கையளிக்கப் பட்டது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் உத்தி யோகபூர்வமாக இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது