சிசு ஒன்று பிறந்தவுடன் உறை ஒன்றில் போட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயதான தாயும் தாயின் தாயும் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமணம் ஆகாத இந்த யுவதியின் நிலையை அறிந்திருந்த அயல் வீட்டவர்கள் வழங்கிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிசுவை புதைத்திருந்த குழியை தோண்டிய பொலீசார் அங்கு பொலித்தீன் உறையில் சுற்றி புதைக்கப்பட்டிருந்த சிசு உயிருடன் இருப்பதை அறிந்து அதனை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.