ரக்லான் அருகே கடலில் இருந்து மீட்கப்பட்ட சடலம் மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

52 வயதான ஓல்சன் கனடோய் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாப்பானுயி முனையில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டது.

அவரது மீன்பிடித் தோழர் எரிக் டபலோஸ் என்ற நபரை இன்னும் காணவில்லை.