பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கோஷிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சாலை வழியே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரேகுடும்பத்தை சேர்ந்த 9 பேர் காரில் பயணம் செய்தனர்.

லோட்டர் என்ற பகுதியில் உள்ள மலைப்பாங்கான சாலையில் வேகமாக சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த குழந்தை, பெண் உட்பட 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.