கிண்ணியா குறிஞ்சாக்கேனியில் பாடசாலை மாணவர்களுக்கு விஷேட இலவச பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்.

நேற்று இடம்பெற்ற படகு விபத்தில் 6 பேர் உயிரழந்ததை தொடர்ந்து மாணவர்களுக்கான போக்குவரத்தினை பாதுகாப்பானதாக அமைக்கும் பொருட்டு இலவச பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பஸ் சேவையானது காக்காமுனை சந்தியில் இருந்து கச்சக்கொடித்தீவு, குறிஞ்சாக்கேணி ஊடாக சென்று மாணவர்களை ஏற்றிச் செல்லவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிடுகின்றது.