யாழ்ப்பாணம் மன்டைதீவிற்கு அண்மையில் உள்ள பூவரசந்தீவு கடற்கரையில் 22 ஆம் திகதி படகில் பயணித்த பாசையூரைச் சேர்ந்த ஒருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

22 ஆம் திகதி அதிகாலை 3  மணியளவில் கரையை அண்மித்த சமயம் கடற்படையினர் மறைந்திருந்து மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகில் பயணித்தவர்  கடலில் குதித்துள்ளார். அவ்வாறு கடலில் குதித்தவர்   வீடு திரும்பவில்லை.

வீடு திரும்பாதவர் கடலில் குதித்த இடத்தில் இருந்து 5 முதல் 10 நிமிடங்கள் நீந்தினால் கரை அடையும் தூ்த்திலேயே படகு இருந்தபோதும் இதுவரை கரை திரும்பாத காரணத்தினால் மீனவரின் கிராமத்தில் பதற்றம் நிலவுகின்றது.