சனிக்கிழமை இரவு 25 கார்களில் முகமூடி அணிந்த 80 நபர்கள் கைகளில் ஆயுதங்களுடன் வந்து நார்ட்ஸ்ட்ரோம் அங்காடிக்குள் நுழைந்து கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில்,
வால்நட் கிரீக்  பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு கடந்த சனிக்கிழமை இரவு  25 கார்களில் முகமூடி அணிந்த 80 நபர்கள் வந்துள்ளனர்.

கைகளில் ஆயுதங்களுடன் அங்காடிக்குள் நுழைந்த அவர்கள், கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்தனர்.

இதனை தடுக்க முயன்ற 2 பேரை தாக்கினார்கள். ஒருவர் முகத்தில் மிளகு ஸ்பிரே அடிக்கப்பட்டது. காயமடைந்த மூவருக்கும் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், கண் இமைக்கும் நேரத்தில்  அவர்கள் காரில் தப்பி சென்றனர்.அதில் 3 பேரை பொலிஸார் கைது செய்ததுடன் ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது

இதுதொடா்பாக என்பிசி   நிருபர், ஜோடி ஹெர்னாண்டஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

அதில், முகமூடி அணிந்த நபர்கள் கைகளில் பை, பெட்டி போன்றவற்றுடன் தப்பிச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் நிகழ்வதற்கு ஒருநாள் முன்பாக  சான்பிரான்சிஸ்கோவின் யூனியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஏராளமான கடைகளுக்குள் இதேபோல் கும்பல் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தக்கது

காணொலி

https://twitter.com/JodiHernandezTV/status/1462284757434175488?t=T4at686tNnBNjORF13gA3g&s=19