மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்காக தாஜ்மஹாலை போன்று வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

இந்த அழகான வீட்டை கட்டிய ஆனந்த் பிரகாஷ் சோக்சே என்பவர் அதனை தனது மனைவி மஞ்சுஷா சோக்சேவுக்கு பரிசாக அளித்துள்ள நிலையில் ஷாஜகான் கட்ட தவறிய தாஜ்மஹாலை தான் கட்டியுள்ளதாகவும் பெருமை பேசுகிறார்.

அதாவது புர்கான்பூரில் உள்ள தப்தி ஆற்றின் கரையில் தாஜ்மஹாலை கட்ட ஷாஜகான் திட்டமிட்டதாகவும், ஆனால் பல காரணங்களால் ஆக்ராவில் கட்டப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுவதை சுட்டிக்காட்டும் அவர், தன் மனைவிக்கு புர்கான் பூரில் தாஜ்மஹாலை கட்டி ஷாஜகான் கட்ட தவறியதை தான் கட்டியுள்ளதாகவும் பெருமை பட கூறுகிறார்.

இதனை கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆனதாகவும் அவர் தெரிவித்தார்.