புனித் ராஜ்குமார் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு பல்வேறு தரப்பினரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அவருடைய சடலத்திற்கு மாநில முழுவதிலும் இருந்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் என அலை அலையாக வந்து தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

கன்டீரவா மைதானத்தில் நீண்ட வரிசையில் நின்று தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில்  கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதியில் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவை தாங்க முடியாமல் துக்கத்தில் இருந்த ராகுல் (21) என்ற ரசிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேலும் நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய ரசிகர்களான முனியப்பன், பரசுராம் ஆகியோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.