மட்டக்குளிய பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்குளிய பகுதியில் உள்ள வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த 1,950 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.