சீனா தனக்கென பிரத்தியேகமாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகின்றது.

இதற்கான பணிகளை மேற்கொண்ட சீனா, ராக்கெட்டுகள் மூலம் விண்வெளி நிலையம் அமைப்பதற்கான தளவாடங்களை விண்வெளிக்கு சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் விண்வெளி குழுவினரை விண்வெளிக்கு சீனா அனுப்பியது. அவர்கள் 3 மாதங்கள் தங்கி விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை செய்து விட்டு பூமிக்கு திரும்பினர்.

இந்த நிலையில் சீனா 3 விண்வெளி வீரர்களை மீண்டும் தனது விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது.

லாங்கு மார்ச்-2 எப் என்ற குறித்த ராக்கெட் ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து நேற்று நள்ளிரவு ஏவப்பட்டது.ஏவப்பட்ட 10 நிமிடங்களில் விண்கலம் தனியாக பிரிந்து புவி வட்ட பாதையில் நுழைந்தது. விண்கலம் சுமார் 6½ மணி நேர பயணத்துக்கு பிறகு  சீனாவின் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது. 

3 விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்துக்கான அடுத்தக்கட்ட பணியில் ஈடுபடுவார்கள். அவர்கள் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருப்பார்கள் என்றும் விண்வெளி நிலையத்தை விரிவுப்படுத்துவதற்கான கருவிகளை நிறுவ அவர்கள் விண்வெளி நடைபயணங்களை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.