நெல்சனில் நபர் ஒருவரை கத்தியால் குத்திய நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வைமியா சாலை முகவரிக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர் என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

47 வயதான நபர் பலத்த காயங்களுடன் நெல்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நிலையான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று நெல்சன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.