நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்  தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் , நன்மையும், பாதுகாப்பையும், மக்களுக்கு வலியுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் ஹாமில்டன் மக்கள் தடுப்பூசி வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹாமில்டன் கிளாட்லெண்ட்ஸ் பூங்கா அருகில் தடுப்பூசியில் செலுத்திக் கொள்ள மாட்டோம், எங்களுக்கு என்று தனிப்பட்ட சுதந்திரம் வேண்டும், என்று சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்  எங்களுடைய வாழ்வில் எங்களுக்கு தேர்வு செய்யும் உரிமையை அளியுங்கள், தடுப்பூசியை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் கோவிட் -19 தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் .