வவுனியாவில் தீயில் எரிந்து பெண் ஒருவர் மரணம டைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சந்தேகத்தில் மரணமான பெண்ணின் கணவர் கைது செய்யப்பட் டுள்ளார் என்று பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, கற்பகபுரம், நான்காம் ஒழுங்கையில் வீட்டிலிருந்து புகை வெளிவந்தததைத் தொடர்ந்து அயலவர்கள் அங்கு சென்றனர்.

அப்போது வீட்டின் அறை ஒன்றில் அந்த வீட்டில் வசித்த பெண் தீயில் எரிந்து கொண்டிருந்தார்.

இதையடுத்து அயலவர்கள் கதவை உடைத்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், பெண் முற்றாகத் தீயில் எரிந்து மரணமானார்.

இந்தச் சம்பவத்தின்போது அவரின் மகனான சிறுவன் மலசலகூடத்துக்குள் வைத்து வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தார்.

விசாரணையின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் அனற்றா (வயது 43) என்பவரே தீயில் எரிந்து மரணமடைந்தவராவார்.

கைது செய்யப்பட்ட கணவர் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணி புரிவதாகவும், மனைவிக்கும் அவருக்கும் இடையில் கடந்த பல மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.