கடந்த ஞாயிற்றுக்கிழமை வெலிங்டனின் வைடாங்கி பூங்காவில் நடந்த கொள்ளை சம்பவத்தில் சாட்சிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் 16 வயது இளைஞர் ஒருவரின் முகத்தை சுத்தியலால் தாக்கியுள்ளார்.

குறித்த வாலிபர் மற்றும் அவருடைய நண்பரை நான்கு பேர் கொண்ட குழுவினர் அணுகி அவர்களிடம் உள்ள பொருட்களை ஒப்படைக்குமாறு கோரியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் தங்கள் அலைபேசியையும் பணப்பையையும் கொடுத்தார் இந்நிலையில் 16 வயது வாலிபனை சுத்தியலால் முகத்தில் அடித்துள்ளனர்.

இந்த குழு நகர மையத்தை நோக்கி ஓடியது,அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

முக்கிய குற்றவாளி சுமார் 5 '10, ஒல்லியாக, பதின்ம வயதினராக இருந்தார் மற்றும் கருப்பு முகமூடி மற்றும் நீல நிற ஹூடி அணிந்திருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.