தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன்,  கற்பகவல்லி தம்பதியருக்கு  சண்முக பாண்டி (8),  தர்ஷினி(7) என்ற இரு குழந்தைகள் உள்ளனர் .

கற்பகவல்லி ஹோட்டலுக்குச் சென்று சிக்கன் கிரேவி வாங்கி வந்து  அதனோடு வீட்டில் இருந்த உணவையும் சேர்த்து தன் மகளுடன் இணைந்து இருவரும் சாப்பிட்டு உள்ளனர் .

அப்போது ஏற்பட்டுள்ள வயிறு எரிச்சல் காரணமாக அருகில் உள்ள கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி இருவரும் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் .

முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே தாயும் மகளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர் .  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்த போலீசார் விசாரணையில் உணவில் விஷத்தை கலந்து உண்டார்களா....? அல்லது உணவே விஷமானதா..? என்பதைக் குறித்து பிரேத பரிசோதனையில் தெரியும் என்று கூறியுள்ளனர்.