காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சரிந்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, பொழிந்த கடும் மழையின்போது இந்தக் கோபுரம் சரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சுனாமி, கடும் மழையுடன் இடைக்கிடையில் ஏற்படும் வெள்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள நிலமை மற்றும் காலநிலை முன் எச்சரிக்கைகளை இந்த சுனாமி எச்சரிக்கை கோபுரங்களைப் பயன்படுத்தி கணிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.