யாழ்பாண மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 56 தொற்றா ளர்கள் இனங்காணப்பட்டனர்.

யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 163 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில், யாழ் போதனா மருத்துவமனையில் 25 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 3 பேர்,தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 2 பேர்,ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் ஒருவர் என்று யாழ் மாவடட்த்தில் 31 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு பொது மருத்துவ மனையில் 6 பேர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 3 பேர், மன்னார் பொது மருத்துவ மனையில் 2 பேர்,வவுனியா செட்டிகுளத்தில் ஒருவர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப் பட்டனர்.

இதனைதவிர,பலாலி விமானப் படை முகாமில் 8 பேரும், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 4 பேரும்,இரணைமடு விமானப் படை முகாமில் ஒருவரும் தொற் றாளர்களாக இனங்காணப்பட்டனர்.