சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அவருடைய ரசிகர்களிடம் வனிதா ஏகப்பட்ட விமர்சனங்களை வாங்கியுள்ளார்.

வனிதா தனது யூ-டியூப் பக்கத்தில் சித்ராவின் மறைவு குறித்து சிறப்பு கேள்வி, பதில் நிகழ்ச்சி ஒன்றை நேற்று மாலை 4 மணிக்கு லைவ்வில் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார். அதுகுறித்த அறிவிப்பில் வனிதா மற்றும் அவருடைய வழக்கறிஞரான ஸ்ரீதரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

வனிதாவின் இந்த அறிவிப்பால் கடுப்பான சித்ராவின் ரசிகர்கள் சரமாரியாக திட்டி தீர்க்க ஆரம்பித்தனர். அடுத்தவர்களின் மரணத்தை வைத்து காசு சம்பாதிக்க பார்க்குறீங்களா? என தாறுமாறாக விமர்சனங்கள் எழுந்தது.

இதனால் சுதாரித்துக் கொண்ட வனிதா முதலில் நேரலையை 6 மணிக்கு நடத்துவதாக அறிவித்தார். அதன் பின்னர் அதைப் பற்றி மூச்சு கூட விடாத வனிதா, நேரலையில் வராதது மட்டுமின்றி, சித்ரா மரணம் குறித்து பேச உள்ளதாக வெளியிட்ட பதிவையே டெலிட் செய்துவிட்டார்.