சமூகத்தில் இன்று 23 புதிய கொவிட்- 19 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவை அனைத்தும் ஆக்லாந்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய அரசாங்க மாநாட்டில் பேசிய பொது சுகாதார இயக்குநர் டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட்

தற்போதைய  சமூக தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1108 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் அவற்றில் 835பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் 13 பேர் உள்ளனர்,இரண்டு பேர் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.