ஆப்கானிஸ்தானத்தில் இருந்த குஜராத்திலுள்ள முத்ரா துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட கன்டெய்னரில் , வருவாய் புலனாய்வு துறையினர் சந்தேகத்தின் பெயரில் விசாரணை  நடத்தியதில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக தெரிகிறது.

2000 கிலோவுக்கும் அதிகமான 10000 கோடி மதிப்புடைய  போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு உள்ளன.

ஆப்கானிஸ்தானத்தில் உள்ள ஆசிப் லிமிடெட்   நிறுவனத்திலிருந்து , ஆந்திராவில் உள்ள விஜயவாடாவை சேர்ந்த ஆசிப் ட்ரெய்னிங்  நிறுவனத்திற்கு இந்த போதைப் பொருள் கடத்த முயற்சி செய்யப்பட்டு உள்ளது .

இதன் சம்பந்தமாக விசாரணை நடத்தியதில்  சென்னையை சேர்ந்த இருவரையும், டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த இருவரையும், போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர் .