வெலிகம பிரதேச சபை உறுப்பினரான பிரசாத் மிலிந்த தனது தாய் மற்றும் தந்தையைத் தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் காரணமாகக் காயமடைந்த பெற் றோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என் றும் தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக இடம்பெற்று வந்த காணி பிரச்சினை காரண மாகவே இந்த சர்ச்சை உருவானது என்றும் அதில் நெல் வயல் ஒரு பகுதியை அவரின் பெயரில் எழுதிக் கொடுக்க வில்லை என்பதற் காக குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேச சபை உறுப்பினரைக் கைது செய்வது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.