பம்பலப்பிட்டி - கொத்தலாவல வீதியில் காணி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெனாண்டோ உடனடி யாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டுத் துப்பாக்கி மேயர் என அனைவராலும் அறியப்பட்ட இவர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

எனினும் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினமே எராஜ் பெனாண்டோ தொடர்பில் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து போலீசாருக்கு அறிவுறுத்தல்கள் மேலிடத்திலிருந்து வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.