பிலிப்பைன்ஸில் நேற்றை தினம் சக்திவாய்ந்த பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது.இப் பூகம்பமானது ரிச்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியது. மேலும் இப் பூகம்பத்தின் மையம் மைண்டானாவோ நகரிலிருந்து 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இப் பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் இது வரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.