5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 100 இனை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கொகரெல்ல, கல்சேருகொல்ல பகுதியில் வைத்து நேற்று மாலை 6.25 மணியளவில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

22 மற்றும் 23 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.