பனிப்பொழிவால் உறைந்த வீதியைக் கடக்க முயன்ற சிறுமியொருவர் 40 முறை வழுக்கி விழுந்த காட்சி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

 

அதன்படி உக்ரைனில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.இந்நிலையில், அந்நாட்டின் கீவ் நகரைச் சேர்ந்த மரியா என்ற 9 வயதுச் சிறுமியொருவர் வீதியில் நடந்து சென்றுள்ளார்.

 

இதன் போது கடுமையான பனி காரணமாக வீதியைக் கடக்க முயற்சித்த குறித்த சிறுமி வழுக்கி கிழே விழுந்தாள். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சிறுமி மீண்டும் எழுந்து வீதியைக் கடக்க முயற்சித்தாள். ஆனால், மீண்டும் வழுக்கி விழுந்தாள்.

 

அவ்வாறு 40 முறை வழுக்கி விழுந்த போதிலும் விடாமுயற்சியால் இறுதியாக குறித்த சிறுமி அவ் வீதியை கடந்து சென்றுள்ளார்.

 

மேலும் ,இந் நிலையில் இது குறித்து வெளியான வீடியோக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.