மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமையின்போது உயிரிழந்த கைதிகளின் இறுதிக்கிரியை முறை தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு இன்று(16) வழங்கப்படவுள்ளது.

 

அதன்படி ,வத்தளை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

இதேவேளை, முரண்பாட்டினை ஏற்படுத்திய கைதிகள் மற்றும் மோதல் ஏற்பட்ட முறைமை குறித்து தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் ,இந்த சம்பவம் குறித்து நேற்று(15) சுமார் 35 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.