திருத்தப் பணிகள் காரணமாக வத்தளை பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று (16) நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய  இன்று(16)  காலை 10 மணி தொடக்கம் நாளை(17) அதிகாலை 4.00 மணிவரை நீர் விநியோகம் இடம்பெறாதென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

ஹேகித்த, பள்ளியாவத்த, வெலியமுன, கலகாதுவ, மருதானை , எலகந்த, ஹெந்தலை, பலகல ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு  நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது