டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 18ம் திகதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க கூட்டணி அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அவமதித்திடும் வகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியிருப்பதற்கும் மத்திய அமைச்சர்கள் பலரும் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கும் கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

வள்ளுவர் கோட்டத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்டணி கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.