முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக மாளிகாவத்தை தண்ணீர் தாங்கியின் மீது ஏறி ஒருவர் கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டார். இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

இதன்காரணமாக அங்கு பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த நபருடன் கலந்துரையாடினார்.

 

பின்னர் பொலிஸாரின் உதவியுடன் அவர் கீழே கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமளியலில் வைக்கப்பட்டுள்ளார்.