அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் விமான நிலையத்தில், புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில்  இளைஞர் ஒருவர் ஏறி அமர்ந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

 

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட சில நிமிடங்கள் இருந்த நிலையில், விமானத்தை நோக்கி ஓடி வந்த குறித்த  இளைஞர் தனது காலணிகளை கழற்றி எறிந்துவிட்டு திடீரென விமான இறக்கையில் ஏறி அமர்ந்துகொண்டார்.

 

இச் சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக விமானத்தின் அருகே சென்று அந்த நபரை சுற்றிவளைத்தனர். இதன் போது விமானத்தின் இறக்கையில் தொங்கியவாறு இருந்த அந்த நபர் நிலை தடுமாறி திடீரென கிழே விழுந்தார்.

 

அந்த நபரை சுற்றி இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கைது செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர். மேலும், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முதல்கட்ட விசாரணையில் விமானத்தின் இறக்கை மீது ஏறிய நபர் மனநலம் குன்றியவர் என தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந் நிலையில் விமானத்தின் இறக்கை மீது அந்த நபர் ஏறி அதில் நடந்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.