பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியான ஹிஷாலினியின் உடலை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அடக்கம் செய்யப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை மேற்கொள்ளுமாறு இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது.