சூர்யா கடந்த 23ம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியானது.

அதன் பிறகு சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் சூர்யா 39 படத்திற்கு ஜெய் பீமன் என்று தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரை சூர்யா ட்விட்டரில் வெளியிட்டதை பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்தினார்.

ரஞ்சித் வாழ்த்தியதை பார்த்த ரசிகர்கள் கூறியதாவது,

ஜெய் பீம் என்கிற தலைப்பை பார்த்ததும் ஓடோடி வந்துடுவீங்களே. நினைச்சோம் நீங்கள் வாழ்த்துவீர்கள் என்று.

சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்தவில்லை.எதற்கும் துணிந்தவன் அப்டேட் வந்தது.அதையும் வாழ்த்தவில்லை.ஆனால் பீம் மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறார்.ஏன் இப்படி சாதியை பற்றி மட்டுமே நினைக்கிறீர்கள் என்றார்கள்.

அதற்கு ரஞ்சித் ஆதவாளர்களோ, அம்பேத்கர் அனைவருக்கும் பொதுவானவர். அப்படி இருக்கும்போது ரஞ்சித் அண்ணாவை இப்படி விமர்சிப்பது தவறு என்று தெரிவித்துள்ளனர்.