Green flights இல் இடப்பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டால் கிவிஸ் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்புவதற்கான வார காலக்கெடுவை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

"நியூசிலாந்தர்களுக்கான எங்கள் உறுதிப்பாடானது, இந்த காலகட்டத்தில் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு போதுமான திறன் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்," என்று அவர் கூறினார்.

"முன்பதிவுகளை மக்கள் தவறவிட்டால் அல்லது விமானத்தில் போதுமான இடம் இல்லை என்றால் காலவரையறையை நீட்டிப்பதைக் கருத்தில் கொள்வோம்,இது எங்கள் உறுதிப்பாடாகும். இடைநீக்கம் தொடங்குவதற்கு முன்பு அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்வோம் என அவர் தெரிவித்தார்.