கம்பளை, எத்கால பகுதியின் சில பிரதேசங்களில் நாளை 9 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை காலை 8 மணி முதல் 5 மணி வரையான காலப்பகுதியில் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எத்கால கிழக்கு, எத்கால சிங்கபுர,எத்கால ஆராம வீதி, எத்கால லக்‌ஷ பிஹில்ல 1 ஆம் ஒழுங்கை, 2 ஆம் ஒழுங்கை, எத்கால பங்கலாவ வீதி மற்றும் ஜயமாலிபுர 6 ஆம் ஒழுங்கை பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எத்கால நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.