ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக முன்னெடுத்து செல்கின்றது.

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 30 தலிபான்கள் உயிரிழந்ததாகவும், 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதிசெய்துள்ளார்.